என் நிழலாக வராதே!
நான்
சாகும் வரை
துணையாக வருவேன் என்றாய்..
உன் வார்தைகளை என்
உயிருக்கும்
மேலாக நம்பினேன்..
நினைப்பது நான் தான்
நீயில்லை..
மறந்தது
நீ தான்
நானில்லை..
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் உன்னை போன்ற
ஒரு
நம்பிக்கை துரோகியை
நான் சந்திக்க கூடாது,
என தினம் தினம்
இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்..